செங்கல்பட்டு, ஆக.24- எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத் தலைவர் பாரி வேந்தர் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மக்களவைத் தொகு திக்குட்பட்ட அரசுப் பள்ளி களுக்கு 100 கணினிகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் தலைவரும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான பாரிவேந்தரின் பிறந்தநாள் விழா சனிக்கிழமையன்று (ஆக.24) எஸ்.ஆர்.எம் தமிழ்ப் பேராயம் சார்பில் இணைத் துணைவேந்தர் இர.பாலசுப்ரமணியன் தலை மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு 100 கணினி களை பாரிவேந்தனர் வழங்கி னார். மேலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள், எஸ்.ஆர்.எம் பணியாளர்களுக்கு ஓய்வூதி யம், பள்ளி மாணவர்களு க்குக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனையொட்டி, இலவச மருத்துவ முகாம், உடல் உறுப்பு தானம் செய்தல், கண்தானம், ரத்த தானம் செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரைப்பட இயக்குநர் லிங்கு சாமி, பல்கலைக்கழக பதிவா ளர் சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசி னர்.